Kishore Kumar Hits

Giftson Durai - Manusharai Pidipom Vaa lyrics

Artist: Giftson Durai

album: Thoonga Iravugal 2


ஊழியம் செய்வதற்கு
செல்வம் தேவை யார் சொன்னார்
அழைப்பை ஏற்கும் நெஞ்சம் போதும்
ஊழியம் செய்வதற்கு
தகுதிகள் தேவை யார் சொன்னார்
மீன்கள் பிடிக்க தெரிந்தால் போதும்
ஓ... எல்லாம் அறிந்த ஞானிகளில்
ஒன்னும் அறியா உன்னை என்னை
அவரின் அழைப்பிற்காக தெரிந்து கொண்டார்
ஓ... கையில் வேதம் நெஞ்சில் பாரம்
மற்றும் எல்லாம் அவரை சேரும்
இயேசுவுக்காய் எதையும் செய்ய சேர்த்துக் கொள்வார்
வா வா வா வா... வா வா வா வா...
கைகள் கோர்ப்போம் வா...
வா வா வா வா... வா வா வா வா...
மனுஷரை பிடிப்போம் வா...
மேய்ப்பனில்லா மந்தை போல
அலையும் மக்களை காண்கிறோம்
உள்ளம் உடைந்தும் உருக்குலைந்தும்
கதறும் சத்தம் நாம் கேட்கிறோம்
அக்கரைக்கு யாத்திரை செய்யும்
படகில் நாம் சிறு பயணிகள்
கதறும் சத்தம் கேட்டு நாம்
நம் படகில் ஏற்றாத பாவிகள்
வா வா பெரும் அழைப்பிற்காக
உன்னை அழைத்திருக்கையில்
நீ தான் அழைப்பிற்காக
கொஞ்சம் காத்து நிற்கிறாய்
வா வா வா வா... வா வா வா வா...
கைகள் கோர்ப்போம் வா...
வா வா வா வா... வா வா வா வா...
மனுஷரை பிடிப்போம் வா...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists