Kishore Kumar Hits

Bharadwaj - Unnai Partha lyrics

Artist: Bharadwaj

album: Rojavanam (Original Motion Picture Soundtrack)


உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
ஹாஆ ஹா ஆ
போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை
ஹாஆ ஹா ஆ
ஒரு தென்றல் போல வந்து
அன்பே என்னை வேர்க்க வைத்தாய்
வள்ளல் போல வாழ்ந்தேன்
உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்
உன் பேரை நான் சொல்லி
என்னை அழைப்பேன்
உன்னை இங்கு நான் தேடி
என்னைத் தொலைத்தேன்
உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை

அன்பே உன் கூந்தலில் நான் கலைந்தேன்
நீ வைத்த பூக்களில் நான் உதிர்ந்தேன்
குழி விழும் கண்ணத்துக்குள் நான் விழுந்தேனே
பிறை நெற்றி வேர்வையில் நான் கரைந்தேனே
நேற்று வரை நேற்று வரை
வாழ்வில் ருசி இல்லை
மலரே உந்தன் மடியில் வாழ்ந்தால்
மரணம் இல்லை
உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
ஹாஆ ஹா ஆ
போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை
ஹாஆ ஹா ஆ

நான் பார்க்கும் வானவில் வளையல்களில்
நான் கேட்கும் மெல்லிசை கொலுசுகளில்
சில்லென்ற நட்சத்திரம் உன் கண்கள்தானோ
பூமத்திய ரேகை உந்தன் கைகளில்தானோ
என்ன நிறம் என்ன குணம் காதல் புரியவில்லை
காதல் கவிதை எதுவும் இன்று தெரியவில்லை
உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
ஹாஆ ஹா ஆ
போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை
ஹாஆ ஹா ஆ
ஒரு தென்றல் போல வந்து
அன்பே என்னை வேர்க்க வைத்தாய்
வள்ளல் போல வாழ்ந்தேன்
உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்
உன் பேரை நான் சொல்லி
என்னை அழைப்பேன்
உன்னை இங்கு நான் தேடி
என்னைத் தொலைத்தேன்
உன்னைப் பார்த்த கண்கள்
இன்னும் மூடவில்லை
போதும் போதும் என்றேன்
நெஞ்சம் கேட்கவில்லை

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists