Dharmapuram P. Swaminathan - Naanaar En Ulamaar lyrics
Artist:
Dharmapuram P. Swaminathan
album: Sivapuranam - Maanikavasakar
நானார்என் உள்ளமார் ஞானங்க
ளாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை
ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில்
உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே
சென்றூதாய் கோத்தும்பீ
தினைத்தனை உள்ளதோர்
பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறுங் காண்தொறும்
பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக
ஆனந்தத் தேன்சொரியுங்
குனிப்புடை யானுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ
கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ
Поcмотреть все песни артиста
Other albums by the artist