Kishore Kumar Hits

Shabir Sulthan - Enil Paaindhidum Kaadhalae (Reprised) - From "Sinam" lyrics

Artist: Shabir Sulthan

album: Sinam


இதன் முன்னே சிந்தாத மழையே
இதயத்தில் ஏன் வீழ்கிறாய்
இதன் முன்னே நில்லாத நொடியே
யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய்
உறவேதும் இல்லாமல்
குறையேதும் சொல்லாமல்
தனியாக வாழ்ந்தேனே
பிறகு உனை கண்டேனே
ஒரு மோதலாய் அன்று
சிறு தீண்டலாய் இன்று
அன்று நட்பு என்றேனே
இன்று மாற்றி கொண்டேனே
நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே
நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே

புயல் காற்றில் குடை போல்
என் வாழ்வினை தலைகீழென்றே மாற்றினாய்
குடைக்கம்பி வளைக்கின்ற வேளையில்
நனைத்தாயே தூறல்களாய்
காதல் ஈரம் காய ஆசை தீயானை
தீயின் வெப்பம் ஆற
முதனின்று மறுபடி தொடங்குகிறாய்
முடிவேதும் இல்லாமல் (தொடர்ந்திடு)
இளைப்பாற நில்லாமல் (பறந்திடு)
ஒரு வார்த்தை சொல்லாமல் (அணைத்திடு)
விழியாலே கொல்கின்றாய் (கனவிதுவா)

இதுதான் அன்று நான் கண்ட கனவா
முழுதாய் இன்று மெய்யாகுது
இதுதான் அன்று நான் கேட்ட உலகா
அழகாய் இங்கு உண்டானது
நகை ஏதும் வேண்டாமே
புது சேலை வேண்டாமே
கெட்டி மேளம் வேண்டாமே
இரு நெஞ்சம் ஒன்றாக
நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே (எனில் பாய்ந்திடும் காதலே)

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists