Kishore Kumar Hits

Sirpy - Vennilave (From "Kannan Varuvaan") lyrics

Artist: Sirpy

album: Music Director Hits - Sirpy


வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
தொலை தூரம் நின்று நீ
ஏன் வெட்கம் கொள்கிறாய்
உன் அழகு விழிகளால்
ஏன் என்னை கொல்கிறாய்
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா

அழகே உன் முகத்தில்
ஏன் முத்தான வேர்வை
அந்த முகிலை எடுத்து
முகத்தை துடைத்து விடவா
இந்த சுகமான நாட்கள்
இனி தினம் தோறும் வேண்டும்
உன் மடியில் இருந்து
இரவை ரசிக்க வரவா
அடி உன்னை காணத்தான்
நான் கண்கள் வாங்கினேன்
உன்னோட சேரத்தான்
என் உயிரை தாங்கினேன்
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா

கண்ணோடு கண்ணும்
ஒரு நெஞ்சோடு நெஞ்சும்
வந்து பழகும் பொழுதில்
இடையில் ஏது வார்த்தை
தொலை தூரம் நீயும்
தொட முடியாமல் நானும்
என்று தவிக்கும் பொழுதில்
இனிக்கவில்லை வாழ்க்கை
என் நெஞ்சின் ஓசைகள்
உன் காதில் கேட்குதா
நான் தூவும் பூவிதை
உன் நெஞ்சில் பூக்குதா
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
தொலை தூரம் நின்று நீ
ஏன் வெட்கம் கொள்கிறாய்
உன் அழகு விழிகளால்
ஏன் என்னை கொல்கிறாய்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists